Followers

Tuesday, April 29, 2008

Thought for the day - 30.4.08

Vice breeds disease. Evil thoughts and habits, bad company and unsuitable food food are the main causes of ill health. Arogya (Good Health) amd Ananda (Happiness) go hand in hand. When the mind is happy, the body too is free of disease. Evil habits, which men indulge in, are the chief causes of diseases, physical as well as mental. Greed affects the mind; disppointment makes man depressed. Man can justify his existence only by the cultivation of virtues. Only then does he become a worthy candidate for godhood.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Puttaparththi 10


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அண்மையில் அமரத்வம் அடைந்த நம் மதுரை மூத்த சாயி பக்தர் பகவான் பாபாவின் அணுக்கத் தொண்டரக விளங்கிய பி.எஸ்.ஏ. சுப்ரமனியம் செட்டியார் அவர்கள் பகவான் அருட்கடாட்சம் அன்பு அரவணைப்பின் மூலம் தம் மனோவலிமை விடாமுயற்சியினாலும், குறிப்பாக பக்தர்களின் பேரன்பினாலும் , பேருதவியினாலும் ,பெரும் ஒத்துழைப்பினாலும் பிரசாந்திநிலைய பூர்னசந்திர ஹாலின் (Poorna Chandra Hall) மேடையின் 2 பக்கங்களிலும் “ஓம் சிரடி சாயிராம்”, - “ஓம் பர்த்தி சாயி ராம்” ("Om Sri Siradi Sai Ram", - Om Sri Parthi Sai Ram )என பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பதிக்கச் செய்தும் ,நம் பாரத நாட்டின் பற்பல பகுதிவாழ் மற்றும் பல வெளிநட்டு பக்தர்கள், (foreign devotees) சகோதர ,சகோதரிகளை கோடிகணக்கில் “ஓம் சாயி ராம்” எனும் நாம ஜெபங்களை எழுதச் செய்தும் ,அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்களை சேகரித்து பிரசாந்தி மந்திரை (Pirasanthi Manthir)அலங்கரிக்கும் குல்வந் ஹாலின் முன்புறம் அமைந்துள்ள மேடையின் அஸ்திவாரத்தில் அவ் ஏடுகளை பதிக்கச் செய்தும் , அதன் மேடையின் மேல் ராமர், சீதை லட்சுமணர், விக்ரஹங்களை நோக்கி ஆஞ்ஜனேயர் “ ராம நாம பஜனை” செய்யும் காட்சியுடன் விக்ரகம் ஸ்தாபிக்க செய்தும் ,புகழ் பெற்ற சூபர் ஸ்பாலிடி மருத்துவ மனை (Super speciality Hospital) முகப்பில் வைத்தீஸ்வரராக விளங்கிய “தன்வந்தரி பகவான்” சிலையை அலங்கரிக்கச் செய்தும், பிரசாந்தி வினாயகர் கோவில் அருகில் திருமுருகன் கோயில் ,ஆஸ்ரமவளாகத்தின் ஓர் பகுதியில் வேத மாதா காயத்ரி அம்மன் கோவில் எழுப்பியும், பகவான் பாபாவின் முன்னிலையில் பாதுகை பிரதிஷ்டை பூஜைகளை பல ஊர்பக்தர்கள் சூழ கோலாகலமாய் நடத்தி தெய்வ பிரிதி செய்தும் ,அவற்றிற்கும் மேலாக இத்தரனி மக்கள் யாவரும் மகிழும் வண்ணம் கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர்(Goldan Car) ஒன்று கட்டி முடித்து பர்த்தியில் ஓர் பெரிய விழா அமைத்து பகவான் பாபாவிற்கு சமர்ப்பனம் செய்து கொடுத்தும் அவ்வழகிய தங்கத் தேரில்(Goldan Car) எல்லோரும் வியக்கும் வண்ணம் பகவான் பாபாவை எழுந்தருளச் செய்தும் ,நம் மாமதுரையில் டிரஸ்ட் மூலம் அழகியதோர் “ஆனந்த நிலயம்” அமையச் செய்ததும் ,ஆகிய அவரது ஆத்மார்த்தமான உன்னத சேவைகளை நினைத்து நெஞ்ஜம் மகிழ்ந்தும், இவ்விளக்க உரையை என்னையும் ஒரு கருவியாக்கி எழுதவைத்த பகவான் பாபாவின் மலரடி தொழுது சரண் புகுந்து நிறைவு செய்கிறேன்.



ஜெய் சாயி ராம்


R.N.Subramanian


Madurai.



சத்ய வார்த்தை


மனம் அலைபாயும் போது திரும்ப திரும்ப மனதிற்குள் “நான் குரங்கல்ல, மனிதன்” என்று சொல்லிக்கொள்ளுங்கள்.


ஆடம்பரத்திற்கு செலவிடும் தொகையை இல்லாதவர்க்கும், இயலாதவருக்கும், பயன்படும் விதமாக செலவழியுங்கள்.


ஏழைகளுக்கு செய்யப்படும் சேவையில் மகிழும் இறைவன், உங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.


பணிவு இல்லாத இடத்தில் இருக்கும் கணக்கற்ற செல்வத்திற்கு,ஒரு மதிப்பும் கிடையாது.


கடமையைச் செய். பலனுக்காக கையேந்தாதே. இதுவே மிகப் பெரிய வேள்வியாகும்.


உன் கடமையை ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்ப்பார்.


அடுத்தவர்களுடைய துன்பத்தை நம்முடன் இணைத்துப் பார்த்து அவர்களுடைய துன்பத்தை களைய முயற்ச்சி செயுங்கள்.


எந்த ஒரு செயலைச் செய்தாலும் மற்றவருடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள்.


சேவை செய்வதை விட உயர்ந்த பலனும், சத்தியத்தை கடைப்பிடிப்பதைவிட உயரிய தர்மமும் கிடையாது. இவ்விரன்டையும் செய்பவர்களுக்கு கடவுள் தானாகவே விரும்பி வந்து அருள் செய்கிறார்.


ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, இறைவன் உங்களிடம் அதைவிட பல மடங்கு அதிகமான அன்பு செலுத்துகிறார்.


அனைவரையும் கடவுளாகப் பாருங்கள். அவ்வாறு பார்க்கும்போது மற்றவர்களின் குறை கண்ணுக்குத் தெரியாது. பயனில்லாத எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காது.


கல்தூணை, பனித்துளிகளால் கரைக்க முடியாததைப்போல, மனதில் உள்ள நல்ல எண்ணங்களை, யார் தாழ்த்தி பேசினாலும் ஒன்றும் ஆகிவிடாது.


இறைவன் உங்களது குலம், கோத்திரம், பணம், பதவி இவற்றில் எதையும் பார்ப்பதில்லை. நேர்மை, தூய்மை ஆகியவைகளையே பார்க்கிறார்.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள். மற்றொருவருக்கு துன்பத்தைத் தருகிறது. ஆகவே, இன்பம் என்பது ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.


இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு உங்களது கடமை முடிந்து விட்டது. அதனை நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் இறைவன் கையில் தான் இருக்கிறது.


---- Bagavan Sri Sri Sri Sathya Sai Baba