Followers

Wednesday, October 23, 2013

இடி, மின்னல் நேரத்தில் தப்பிப்பது எப்படி? தமிழக அரசு விளக்கம்

இடி மற்றும் மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு தலைமை மின் ஆய்வாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பருவமழை, புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

* வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில், ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள்.

* உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை மாற்றி விடுங்கள்.

* டி.வி. ஆண்டனா, கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

* மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.

* மழைக்காலங்களில் மின் மாற்றிகள்(டிரான்ஸ்பார்மர்கள்), மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.

* மழை மற்றும் பெரும் காற்றினால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள்.

* மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது, போதுமான இடைவெளி விட்டு கட்டவும்.

* மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்காதீர்கள்.

* இடி மற்றும் மின்னலின்போது, வெட்டவெளியில் இருக்காதீர்கள்.

* தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள்.

* மேலும் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத இடங்களில் தஞ்சம் அடையுங்கள்.

* டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை மழை மற்றும் மின்னல் நேரங்களில் பயன்படுத்தாதீர்கள்.

* மின் சர்க்யுட்டுகளில் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது.

* சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது சரியானஅளவு திறன் கொண்டவற்றை பொறுத்த வேண்டும்.

No comments: