Followers

Sunday, July 28, 2019

Thought for the Day

Cold and heat are both in the plan of God! Accept this and treat both as valuable. Trials and tribulations are effective instruments in God’s toolbox to purify you. In fact, Mother Kunti prayed to Krishna, “Give us always grief, so that we may never forget Thee.” Suffering and pain are the dietary restrictions that doctor prescribes to supplement the drug of remembrance of God (namasmarana). Thorny plants and thornless plants are both present in nature; the wise individual knows the value of both. He plants the thornless sapling and surrounds it with thorny bushes, so that what he fosters is left unharmed. Activity can save, as well as kill; it’s like the cat that bites; it bites the kitten to carry it in its mouth to a place of safety but it bites the rat in order to kill and eat. Become the kitten, and work will rescue you like a loving Mother. Become a rat, and you’ll be lost!

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Examine your mind and thoughts; do not seek other’s faults

Cleanse your emotions, passions, impulses, attitudes, and reactions - this is the essence of spiritual discipline from all faiths. Examine your mind and thoughts; do not seek other’s faults. See only good. Speak ill of none! If you slip into slander, repent and resolve not to give vent to that habit again. Humiliate none; respect everyone for the good in them. Their grief at your behaviour will haunt you during your last moments. Let every act of yours stand as your credentials when you leave the world. Let no single act be a drag, or a debit. Soak every moment in love for God. Of what avail is it to spend hours in meditation, and then spread anger and inflict resentment through your words and deeds with friends and family? The Gita recommends you to be satatam yoginah - ever controlled and yoked with the Divine. So be vigilant, be steady, be earnest. The steady person earns wisdom. 

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Desire destroys devotion, anger destroys wisdom, and greed destroys work – hence these bad qualities must be sacrificed.

Presently devotion is only ‘deep ocean’, where people are submerged in the ocean of worldly life. People talk about compassion, but are concerned only with ‘fashion’. They mouth the word ‘co-operation’, but indulge only in ‘operation’. Presently, devotion is becoming a pompous show. To secure the grace of the Divine, it is not necessary to seek knowledge, wealth, power or position. Purity of mind alone is enough. Every cell of one's body will be filled with the Divine when God is worshipped with pure and single-minded devotion. To the self-sacrificing devotee, God will be Omnipresent. True knowledge comes when one is confronted with an extreme moral crisis. This was the situation Arjuna faced when he was placed between the two opposing armies. Parikshit faced a similar crisis when he learnt he had only one week to live. During such crisis one thinks of God and seeks Divine help. The Lord is ever ready to answer the prayers of true devotees.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

Friday, July 26, 2019

இந்தியனின் மூளை



நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர், அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும், தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம் புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார், கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும்..
வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்கப் பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார். இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார்.
அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவு பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்.." என்றார்.
அதற்கு அந்த இந்தியர், " நான், ஏர்போர்ட்டில் காரை இரு வாரத்திற்கு நிறுத்தி வைத்தால் 50 டாலராவது தரவேண்டி வரும். அதனால் தான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு இங்கு நிறுத்தினேன். அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டு போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடிவு செய்தே கடன் வாங்கினேன்" என்றாரே பார்க்கலாம்

Thursday, July 25, 2019

Thought for the Day

You must make your mother happy. When you cannot make your mother happy, how can you be peaceful? It is meaningless to worship God without revering one's own parents. Hence first offer worship to your mother as she is the one who has given you birth. Only if the mother's heart is nectarous will the whole world be nectarous. Lord Rama's divinity blossomed under the loving care of Kausalya. As He was born from the womb of Kausalya, He got the qualities of Kausalya. That is why He is worshipped as God. Shivaji could do so much sacrifice for the country because he was born to the pure lady, Jijabai. It is because of the nobility of the mother that the children attain good fortune. So, embodiments of love! There is nothing beyond love. Only love is the mainspring of all your good fortune. You should therefore adore and worship the mother who is the embodiment of love. 

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது


ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு #சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.
ஆனால் எவை சிலைகள், எது #சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்தார். ஒரு யோசனை வந்தது.
சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது #ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.
கெடுத்தது எது? தான் என்கிற #ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
மீண்டும் ஒரு நல்ல கருத்துடன் சந்திப்போம்.

பொறாமை கொண்ட அர்ஜுனன்...


கர்ணனின் வீரத்தை புகழ்ந்துதள்ளிய கண்ணன்
பொறாமை கொண்ட அர்ஜுனன். பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு இடையே மட்டும் நடக்கும் போர்.) மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தமானது யாருக்கு வெற்றி கிட்டும் என்று யூகிக்கவே முடியாத அளவு கடுமையாக இருந்ததுஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்து கர்ணனின் தேரை நூறு கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டான். (ஒரு கஜம் என்பது 3 அடிகளாகும்). ஆனால் மீண்டும் முன்னேறிய கர்ணன், அதே போன்றதொரு சக்தி மிக்க அஸ்திரம் ஒன்றை அர்ஜூனனின் தேர் மீது எய்தான். அதனால் பத்து கஜ தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
அப்போது தேரில் சாரதியாயிருந்த ஸ்ரீ கிருஷ்ணர்ஆஹா.. அற்புதம்அற்புதம்என்று தன்னையுமறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கூவினார்.
அர்ஜூனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபக்கம் பொறாமை.
நாம் இதே அஸ்திரத்தை எய்து கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளியதை இந்த கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால் கர்ணனோ வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம் தேரை தள்ளியதை மெச்சுகிறானேஇதென்ன அநியாயம்? இதென்ன விந்தை?”
அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் கர்ணன், என் கிரீடத்தை தனது அஸ்திரத்தால் வீழ்த்தியபோது கூட அவனை மெச்சவில்லை. சொல்லப்போனால் இதைவிட அது பெரிய தீரச் செயல். அப்போது அவனை பாராட்டதவன் இப்போது மட்டும்ஆஹோ ஓஹோஎன்று பாராட்டுகிறானே? அதுவும் நான் செய்ததில் பத்தில் ஒரு பங்கே அவன் செய்தமைக்கு?” இவ்வாறாக காண்டீபனின் மனதில் ஐயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
அர்ஜூனன் மனதில் இத்தகு சந்தேகம் ஓடிக்கொண்டிருப்பது பரந்தாமனுக்கு தெரியாதா என்ன? அவனாக கேட்கட்டும் நாம் சொல்லலாம் என்று காத்திருந்தான்.
கண்ணன் நினைத்தது போல அர்ஜூனன் தன் மனதை குடைந்துகொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்டேவிட்டான்.
மதுசூதனா…. கர்ணன் தனது அஸ்திரத்தால் எனது கிரீடத்தை பறக்கச் செய்தபோது கூட நீ சிலாகிக்கவில்லை. ஆனால், என்னை விட பத்தில் ஒரு பங்கு தேரை அஸ்திரத்தால் தள்ளியதற்கு நீ மெச்சினாயேஏன்?”
தூரக்கணக்கும் பாரக்கணக்கும்!
கிருஷ்ண பரமாத்மா அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்
அர்ஜூனா நீ கர்ணனின் தேரை நூறு கஜ தூரம் தள்ளினாய்அவன் பதிலுக்கு அஸ்திரப் பிரயோகம் செய்து உன் தேரை பத்து கஜ தூரம் தான் தள்ளினான். இருப்பினும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டத்தக்கது. ஏனெனில்இது தூரக் கணக்கு அல்ல. பாரக்கணக்கு. அவன் தேரைப்போலவே உன் தேரிலும் ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டிருப்பதாக நீ நினைத்துகொண்டிருக்கிறாய். உண்மை அதுவல்ல.
உன் தேர்க்கொடியை பார். அந்தக் கொடியில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கிறான்.
ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்துக்காக பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் ஆவிர்பவித்திருக்கிறான் என்பதை மறந்துவிட்டாயா? அனுமன் இருக்குமிடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உன்னைக் காக்க உன் தேரில் உன்னுடன் இருக்கிறார்.
அவ்வப்போது தனது சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் இல்லையேல் என்றோ மந்திர அஸ்திரங்கள் உன் தேரை சாம்பலாக்கியிருக்கும். கர்ணன் உன் தேரைப் பின்னுக்கு தள்ள அஸ்திரம் எய்தபோது, அனுமன்மகிமாஎன்னும் சித்தியை பயன்படுத்தி (அஷ்டமா சித்திகளுள் ஒன்று இது!) மலை போன்ற கணமுடையவராக மாறி உன்னை காத்தார். உன் தேரை அசையவிடாமல் செய்தார்.
ஆனால், ஆஞ்சநேயனின் சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன் தேரை பத்து கஜ தூரம் பின்னுக்கு தள்ளியது. அப்படியென்றால் அவன் அஸ்திர பிரயோகதின் தீரத்தை நீயே பார்த்துக்கொள். எனவே தான் கர்ணனை மெச்சினேன்என்றான் பார்த்தசாரதி.
இதைக் கேட்ட அர்ஜூனன் வெட்கி தலைகுனிந்தான். “உண்மை தான் கண்ணாஉன் சக்தியாலும் அனுமனின் சக்தியாலும் தான் நான் தாக்குப்பிடிக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான்….” என்றான்.