Followers

Thursday, January 5, 2017

இளை­ய­ரா­ஜா­வின் உரத்த சிந்­த­னை­கள் :

சாதி, மதம், மொழி பா­கு­பாடு :
நான் ஜாதி, மதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வன், எதி­ரா­ன­வன். மொழிப் பாகு­பாடு எனக்­கில்லை. எனக்­குத் தெரிந்­த­தெல்­லாம் இசை என்ற ஒரே மொழி­தான். சங்­கீ­தத்­தில் ஈடு­பாடு கொண்டு லயித்­துப் பாடு­கின்­ற­வர்­க­ளுக்கு நான் சந்­தர்ப்­பம் தரு­கி­றேன். எந்த மொழிக்­கா­ரர்­கள் பாடு­கி­றார்­கள் என்­பது எனக்கு முக்­கி­யம் அல்ல. எப்­ப­டிப் பாடு­கி­றார்­கள் என்­பதுதான் எனக்கு முக்­கி­யம்.
அவ­னும் இசை­ய­மைப்­பா­ளனே!
வயல் காட்­டில்­வேலை செய்து கொண்­டி­ருக்­கும் ஓர் எளிய மனி­தன், தன் களைப்­புத் தெரி­யா­மல் இருப்­ப­தற்­கா­கச் செய்­யும் வேலை­யில் லயித்­துப் போய்ப்­பா­டு­கி­றானே, அது­வும் சங்­கீ­தம்­தான். அவ­னும் ஒரு விதத்­தில் இசை­ய­மைப்­பா­ளன்­தான்.
நானும் ஒழுக்­க­மும்!
கட­வுள் பக்தி, ஒழுக்­கம் ஆகி­ய­வற்­றில் நான் மேன்மை பெற்­றி­ருக்­கி­றேன் என்று யார் சொன்­னது?.
பிறர் கண்­க­ளுக்கு நான் ஒழுக்­க­முள்­ள­வ­னாக இருப்­ப­தில் பிர­யோ­ஜ­ன­மில்லை. எனக்கு ஒழுக்­க­மாக நான் நடந்­தால்­தான், நான் உயர்ந்­த­வன், மேன்மை பெற்­ற­வன். நீங்­கள் ஒரு மாதி­ரி­யான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைக்­க­லாமா என்று கேட்­கி­றார்­கள். கட­வுள்தானே இந்த ஒரு மாதி­ரி­யான எண்­ணத்தை நமது தாய் தந்­தைக்­குக் கொ­டுத்து நம்­மைப் பி­றக்க வைத்­தார்? அவரே என்னை இதற்கு இசை­யும் அமைக்­கச்­சொன்­னால் அதைக் குறை சொல்­வ­தற்கு நாம் யார்?
யார் சங்­கீ­தக்­கா­ரன்?
புதிய இசை வடி­வத்­தால்­தான் ஒரு­வன் நல்ல சங்­கீ­தக் கலை­ஞனா, என்­றால், அவர்­கள் என்ன, எந்­தக் கொம்­ப­னுமே ‘சரி­க­ம­ப­தநி’ என்ற ஒரு வட்­டத்­துக்­குள்­ளே­தான் சுற்­றி­யாக வேண்­டும். சங்­கீ­தக்­கா­ரன் எவ­னும் முழு­மை­யான சங்­கீ­தத்தை உணர்ந்­த­வ­னல்­லன்.
சங்­கீ­தம் சப்­தத்­துக்­குள் அடங்­கும். சப்­தத்­தின் மூலம் எது என்று உணர்ந்­த­வன்­தான் சங்­கீ­தக்­கா­ரன். தனக்கு சங்­கீ­தம் தெரிந்­து­விட்­டது என்று நிச்­ச­ய­மாக ஒருவன் அறிந்­து­விட்­டா­னே­யா­னால், அவன் பாடவோ, இசைக்­கவோ ஒரு­வ­னுக்­குச்­சொல்­லிக்­கொ­டுக்­கவே மாட்­டான். இசை தெரிந்­த­வன் ஏன் பாட வேண்­டும்? தனக்­குப் பு­கழ், பணம் தேட, அல்­லது தனக்கு இவ்­வ­ளவு தெரி­யும் என்­று­மற்­ற­வர்­க­ளுக்­குக்­காட்டி அவர்­க­ளு­டைய நன்­ம­திப்பு என்ற கர்­வத்தை அடைய. சீச்சீ! இது சங்­கீ­தக்­கா­ர­னின் இலக்­க­ணம் இல்லை பொன்­னுக்­கும், பொரு­ளுக்­கும். புக­ழுக்­கும் ஆசைப்­ப­டு­வ­து­ சங்­கீ­தம் என்று நீங்­கள் சொல்­ல­லாம். உல­கமே சொல்லலாம். ஊஹூம்....நான் சொல்ல மாட்­டேன்.....
எச்­சில் ப­டாத இசை!
நான் விரும்­பும் இசை­யா­னது எச்­சில் படாத இசை, எவ­ரும் தொடாத இசை, எவர் நினை­வி­னா­லும் கூடக்­க­ளங்­கப்­ப­டாத இசை, மவுனமே நான் விரும்­பும் இசை.
பாடல் உரு­வா­வது எப்­படி?
நான் எப்­படி ஒரு பாடலை உரு­வாக்­கு­கி­றேன்? ஆற்று நீர் எப்­படி ஊற்­றெ­டுத்து ஓடு­கி­றதோ, அப்­படி! ஏரி நீர் காற்­றில் எப்­படி சிலு­சி­லுக்­கி­றதோ, அப்­படி! கடல் நீரில் அலை­கள் எவ்­வாறு ஆர்ப்­ப­ரிக்­கின்­ற­னவோ அப்­படி! பற­வை­கள் சிறு சிறகை விரித்­துப் பறப்­ப­தெப்­ப­டியோ, அப்­படி! இவை­யெல்­லாம் உரு­வாக்­கப்­பட்­டது எப்­ப­டியோ, அப்­ப­டியே பாட­லும் உரு­வா­கி­றது. ஒரு வித்­தி­யா­சம் சர்க்­கஸ்­கா­ர­னின் முன்­னால் பழக்­கி­வைக்­கப்­பட்ட விலங்கு எப்­படி ஆணைக்­குட்­பட்டு வேலை­க­ளைச்­செய்­கி­றதோ, அந்த நிலை­யில்­தான் நான் இருக்­கி­றேன். ஆட்­டு­விக்­கி­றார்­கள், ஆடு­கி­றேன். மக்­களோ கைதட்­டு­கி­றார்­கள்.
இத்தகைய உயர்ந்த சிந்தனை கொண்ட
 நம் இசைஞானி இளையராஜா அவர்கள்
வாழும் நாட்களில் நாமும் வாழ்வது தான்
நம் பாக்கியம் அல்லவா? .
இசையில் மட்டுமல்லாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் நற்பண்புகள் பல கொண்டு வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே வாழும் நம் இசைஞானி
என்றுமே ராஜா தான்.
நன்றி. ..தினமலர். ..
கிறிஸ்டினா. ..

No comments: