Followers

Tuesday, November 7, 2017

நவம்பர் 8.....ஊழல் ஒழிப்பு தினம்.....




துணிச்சலாய் நடவடிக்கை எடுத்த பிதாமகனே.....வாழ்த்துக்கள் பிரதமரே...
ஆடுவோமே......பள்ளுப் பாடுவோமே...
ஆனந்த (பொருளாதார) சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று....


ஒருமுறை, இருமுறை, பலமுறை சொல்லியும் புரியவில்லையென்றால், அது வடிகட்டிய முட்டாள்தனம்.
ஒருமுறை, இருமுறை, பலமுறை சொல்லியும் புரியாதது போல நடித்தால், அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
.
நவம்பர் 04, 2017 நிகழ்ச்சியில், பாரதம் சமீபத்தில், பெற்ற பல்வேறு ரேங்குகளை குறிப்பிட்டு, மோடிஜி குறிப்பாலுணர்த்திய செய்தி, இதுதானோ?
.
.
1. Global Competitiveness Index By WEF
உலக போட்டியிடும் திறம் குறியீடு -- 3 ஆண்டுகளில், 31 ரேங்க் உயர்வு. (உலக பொருளாதார மையம் ) (71லிருந்து 40)
.
2. Global Innovation Index By WIPO
உலக புத்தாக்க திறம் குறியீடு – இரண்டு ஆண்டுகளில், 21 ரேங்க் உயர்வு (உலக அறிவுசார் உடைமை அமைப்பு) ( 81லிருந்து 60)
.
3. Logistics performance index By World Bank
உலக லாஜிஸ்டிக் செயல்பாடு குறியீடு – இரண்டு ஆண்டுகளில், 21 ரேங்க் உயர்வு (உலக வங்கி) (54லிருந்து 35)
.
4. Ease of doing business Rank By World Bank
சுலபமாக வர்த்தகம் செய்யும் திறம் தரவரிசை – மூன்று ஆண்டுகளில், 42 ரேங்க் உயர்வு (உலக வங்கி) (142லிருந்து 100)
.
.
டீமனிட்டைசேஷனின் போது, ---
“ இப்படியெல்லம் டீமானிட்டைசேஷன் செய்ய, ஹார்வர்டில் சொல்லிக்கொடுக்கவில்லை, ஆக்ஸ்ஃபோடில் சொல்லிக் கொடுக்கவில்லை. மோடி தன்னிச்சையாக, முட்டாள்தனம் செய்து விட்டார்”, ----
என்றவர்கள், வெள்ளைத்தோலன் கருத்தியல் ஓங்கி நிற்கும் உலக அமைப்புக்கள், இந்திய பொருளாதாரத்துக்கு நற்சான்றிதழ் தரும்போது, “ வெள்ளைத் தோலன் கருத்தியல் அமைப்புக்கள் தவறு செய்து விட்டன; அவர்கள் விலை போய் விட்டார்கள்”, என்று சொல்கிறார்கள்.
.
.
பூனைகள், பட்டப்பகலில், ஒளிமிகுந்திருக்கையில், கண்ணை மூடிக் கொண்டு, "உலகம் இருண்டுவிட்டது", என்று சொன்னால், உலகம் இருண்டதாகிவிடது.
பூனைகளின் கண் அமைப்பு அப்படி, வெளிச்சத்தை தாங்காது.
.
.
அதுபோல, சிலருக்கு ஊழல் நிறைந்த கருப்பு பொருளாதாரம் மட்டுமே சிறப்பான பொருளாதாரமாக தெரியும்.
.
வெளிப்படையான செயல்பாட்டுடன், அனைவரையும் அரவணைத்து உயரும் பொருளாதாரத்தை பார்க்கவோ, உணரவோ, சிலருக்கு திறமில்லை.
.
உணரவே முடியாமல், ஊழலில் திளைத்து, மனம் மரத்துப் போனவர்கள், நல்லதை பாராட்ட முடியாமல், வசை பாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
.
“நீண்ட காலத்தில் நாமெல்லோரும் செத்திருப்போம்” என்று பயந்து, அவசரம் அவசரமாக, ஊழல் செய்தோரை நம்பி, மென்மேலும் ஏமாறும் அப்பாவிகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
.
.
எது எப்படியாயினும், மோடிஜி அரசு, " நீகாநாசெ ஊழல்வாதிகளிடம், இன்றளவும் ஏமாந்து நிற்கும் அப்பாவி"களின் உயர்வுக்கும் சேர்த்தேதான் உழைக்கிறது.
சப் கா சாத் சப் கா விகாஸ்.

No comments: