Followers

Saturday, April 12, 2008

Puttaparththi -7

தெய்வபிரிதி -பாப பீதி - சங்க நீதி ஆகிய இவையே பாபா நமக்கெல்லாம் வழங்கும் “தாரக மந்த்ரம்” ஆகும். இவ்விளக்கங்கள் யாவும் நாம் சீறிய முறையில் அறிந்து மனம் தெளிவுபெற “சனாதன சாரதி இதழ்” நமக்கு வழி வகுக்கிறது எனில் அது மிகையில்லை. பக்தர்களுக்கு சனாதன சாரதி இதழ் ஓர் பொக்கிஷமேயாகும். எனவெ இத்தகு பெருமை பொருந்திய சனாதன சாரதி இதழ் நம் இல்லந் தோறும் வாசம் செய்ய பக்தர்கள் அனைவரும் தவறாது சந்தா செலுத்தி வரவழைப்போமாக!(அதற்குரிய முகவரி) “சனாதன சாரதி தமிழ்” பகவான் சத்ய சாய் ட்ரஸ்ட் தமிழ் நாடு , 7, சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028(Sanathana Sarathy Tamil , Sri Sathya Sai Trust Tamil Nadu, 7,Sundaram Salai, Raja Annamalaipuram, Chennai 600 028)


சின்னஞ்சிறு கிராமமாக இருக்கும் புட்டபர்த்தி எதிர்காலத்தில் பெரிய நகரமாக விளங்கி ஆன்மிக கேந்திரமாக (திருப்பதி போலும்-Thiruppathi) இருந்தும் உலக ஒற்றுமைக்கும் பேரமைதிக்கும் வழிவகுக்கும் என்று பகவான் பாபா அவர்கள் தம் சின்னஞ்சிறு பிராயத்திலேயே தம் அன்பு அன்னை ஈஸ்வரம்பா அவர்களிடம் ஏற்கனவே குறிப்பிட்டதை இன்று கண்கூடாக மெய்ப்பித்து வருகிறார்.

தொடரும்

3 comments:

ஹரி ஓம் said...

இந்த வலைப்பதிவை ஸ்வாமியின் கருத்துகளுக்கு மட்டும் ஒதுக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Anonymous said...

ஜெய் சாய் ராம்

தங்கள் வருகைக்கு நன்றி

எல்லாம் அவன் செயல்!

Anonymous said...

Ohm Sri Sai Ram